காதலனால் ஏமாற்றப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமி

கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலனால் ஏமாற்றப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுவந்த 14 வயது சிறுமியை போலீசார் பத்திரமாக மீட்டனர். 

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த நிர்மலா என்பவரின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். தனது இரண்டு மகள்களுடன் நிர்மலா இதே பகுதியில் தொடர்ந்து வசித்துவருகிறார்.

இதில் மூத்த மகள் கடந்த ஆண்டு மாயமான நிலையில் நிர்மலா அளித்த புகாரின்பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்தனர். இந்த நிலையில், மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சிறுமியை கடத்திச் செல்ல முயன்றவர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த சிறுமி நிர்மலாவின் மகள் என்பதை கண்டறிந்தனர். விசாரணையில் அந்த சிறுமி கடந்த ஆண்டு ஒருவரைக் காதலித்ததாகவும், அவரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுவந்ததாகவும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டாலும் அவரை கண்டுபிடிக்க போலீசார் மெத்தனம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
Image Credit : http://ns7.tv

Comments