நாகினி 2 முடிஞ்சி போச்சே... ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க விடை கொடுக்கும் மவுனிராய்

சென்னை: நாகினி சீரியலை பார்க்காதவர்கள் இருந்திருக்க முடியாது. இச்சாதாரி நாகம் அழகான பெண்ணாக உருவெடுத்து வந்து தன் பெற்றோர்களை கொன்றவர்களை பழிவாங்குவதுதான் கதை. இந்த சீரியலின் இரண்டாம் பாகமும் முடிவடைந்து விட்டதால் தனது ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்துள்ளார் மவுனிராய்.



சன்டிவியில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பான இந்த சீரியல் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலின் இரண்டாம் பாகமும் ஹிந்தியில் ஒளிபரப்பாகி லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளது. சீரியல் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூட்டிங்கில் ரசிகர்களுக்கு கேலியும், கிண்டலுடன் கண்ணீர் மல்க விடை கொடுத்துள்ளனர் நடிகர், நடிகையர்கள். நடிகை மவுனிராய் பெரிய கண்களில் கண்ணீர் சிந்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நாகினி 2 தமிழில் எப்போது ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.  

Comments